மின்வெட்டு நேரம் குறைப்பது தொடர்பில் மின்சாரசபை வெளியிட்ட அறிவித்தல்
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Power Cut Today
By Kiruththikan
நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை வீழ்ச்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 50 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நந்திக பதிரகே தெரிவித்துள்ளார்.
நீர்மின் உற்பத்தி மூலம் கடந்த வாரம் 210 ஜிகாவொட் மின்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.