முல்லைத்தீவு - கொக்கிளாய் மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் நேற்றைய தினம் (16) மாலை மீனவர்களின் வலையில் புள்ளி சுறா ஒன்று அகப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களுடைய வலையில் சிக்கிய குறித்த புள்ளி சுறா கரைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த புள்ளி சுறா மீனை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரமளவில் திருகோணமலை - குச்சவெளி கடற்கரையிலும், பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த மீனையும் மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் விட்டிருந்தனர். அந்த வகையில் அண்மைக்காலங்களில் உயிரிழந்த நிலையிலும் பல கடல்வாழ் உயிரிழனங்கள் கரையொதுங்கி வருகின்றன.
இதனால் இலங்கையில் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.