இலங்கைக்கு விழுந்த பலத்த அடி -சுற்றுலா வருவதை இரத்து செய்தது ஜேர்மன் நிறுவனம்
இலங்கைக்கான விடுமுறைகள் இரத்து
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கைக்கான விடுமுறைகளை மேலும் இரத்து செய்வதாக ஜேர்மனை தளமாகக்கொண்ட சுற்றுலாத்துறை முன்னணி நிறுவனம் டியுஐ(TUI) அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக டியுஐ கடந்த மே மாதம் முதல் இலங்கை விடுமுறைகளை இரத்து செய்து வருகிறது.
இதன்படி தற்போது ஓகஸ்ட் 22 வரையான பயணங்களை அந்த நிறுவனம் இரத்துச்செய்துள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற பயணங்களை தவிர்க்குமாறு வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இதன் விளைவாகவே துரதிர்ஷ்டவசமாக 22 ஓகஸ்ட் இலங்கைக்கு புறப்படும் அனைத்து பயணங்களையும் இரத்து செய்ய வேண்டியேற்பட்டுள்ளது என்று டியுஐ குறிப்பிட்டுள்ளது.
எனினும் இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு இந்த அறிவுரை பொருந்தாது என்று டியுஐ அறிவித்துள்ளது.
