அரச தலைவரின் அதிகாரங்களை குறைக்கும் யோசனை! ரணில் தலைமையில் கட்சிகளின் விசேட கூட்டம்!
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
21st Amendment
By Kiruththikan
அரச தலைவரின் அதிகாரங்களை குறைக்கும், அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21வது அரசியலமைப்பு திருத்தத்தின் வரைவு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி