கைதிகளின் புனர்வாழ்வு தொடர்பான நிபந்தனைகள் மறுசீரமைப்பு!

Sri Lanka Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Shadhu Shanker Dec 03, 2023 08:26 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக பரிந்துரைப்பதற்கான தற்போதைய நிபந்தனைகளை திருத்துவதற்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ​​சிறையில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை சுமார் 26,574 ஆக உள்ளது.

இலங்கைக்கு வந்து குவியப்போகும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியப்போகும் சுற்றுலா பயணிகள்

கைதிகளின் வயது எல்லை

அவர்களில் 14,130 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளின் புனர்வாழ்வு தொடர்பான நிபந்தனைகள் மறுசீரமைப்பு! | The Ministry Of Prisons Affairs Take Action

எனவே போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்படும் கைதிகளின் அதிகபட்ச வயது எல்லை 45லிருந்து 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்த எந்தவொரு திட்டமும் இல்லை : பரீட்சைகள் திணைக்களம்

மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்த எந்தவொரு திட்டமும் இல்லை : பரீட்சைகள் திணைக்களம்

புனர்வாழ்வு நடவடிக்கை

கைதிகளை புனர்வாழ்விற்காகப் பரிந்துரைப்பதில், புனர்வாழ்வு வழக்கைத் தவிர, அவர்களுக்கு எதிராகப் பதியப்பட்டுள்ள மற்ற வழக்குகள் முடிவடைந்த பின்னரே, புனர்வாழ்வு நடவடிக்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற தற்போதைய நிபந்தனையும் திருத்தப்பட்டுள்ளது.

கைதிகளின் புனர்வாழ்வு தொடர்பான நிபந்தனைகள் மறுசீரமைப்பு! | The Ministry Of Prisons Affairs Take Action

இத்திருத்தத்தின் பிரகாரம், பாரிய குற்ற வழக்குகள் தவிர்ந்த சிறிய குற்றங்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகும் கைதிகளை புனர்வாழ்வளிக்க பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிச் சேவை ஆணைக்குழு, உரிய திருத்தங்கள் குறித்து அனைத்து நீதி அதிகாரிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!

போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026