பேரறிவாளன் விடுதலையென்பது வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு! மு.க.ஸ்டாலின் அறிக்கை
32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்றைக்கு உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்...7 பேர் விடுதலையில் கழக அரசு முனைப்போடு செயல்படும் என்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 494-வது வாக்குறுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது எனவும் அதே நிலையில் மாநிலத்தினுடைய உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலை நாட்டப்பட்டிருக்கிறத எனவும் குறிப்பிட்டார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை