காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டு.நகரில் இடம்பெற்ற துணிகர கொள்ளை
மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்ல் நகரில் தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை (20) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.
நகரில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் காவல்துறையினர் இரவு பகலாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
மூன்று கடைகளில் கொள்ளை
இந்த நிலையில் நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் பேருந்துகள் நிறுத்தும் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள இரு புடவைக்கடை ஒரு இலத்திரணியல் மற்றும் கைதொலைபேசிகள் விற்பனை செய்யும் கடைகளின் பூட்டை உடைத்து கடைகளுக்குள் திருடர்கள் உட்சென்றுள்ளனர்.

அங்கிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தீய சக்திகளின் ஏவலாளி :தமிழர் ஒற்றுமையை குலைக்கத்துடிக்கும் அர்ச்சுனா : பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கடும் கண்டனம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |