நெருக்கடியில் அரசாங்கம்! நள்ளிரவில் கூடுகின்றது ஆளும் பங்காளிக் கட்சிகள்
சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை நள்ளிரவு நேரத்தில் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் சிறிய கட்சிகள் இன்று விசேட கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் (Udaya Gammanpila) உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி அமைச்சர்களான உதய கம்மன்பில( Udaya Gammanpila), விமல் வீரவன்ச (Wimal Weeravansa) மற்றும் வாசுதேவ நாணயக்கார (Vadudeva Nanayakara) உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இச்சந்திப்பின் முக்கிய அங்கத்தினர் ஆவார்.
அரசாங்கத்தின் சிறிய கட்சிகள் முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகம் மற்றும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) இல்லத்தில் கூடி கெரவலப்பிட்டி ஒப்பந்தம் குறித்து விவாதித்து பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் (Mahinda Rajapkasa) சிறப்பு கலந்துரையாடல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.