மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்ற பாடசாலை : மாகாண கல்வி திணைக்களம் அசமந்தம்!

Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Independent Writer Nov 08, 2024 08:17 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையான உடுத்துறை மகாவித்தியாலயம் மோசடி செய்து முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர், தென்மராட்சி கல்வி வலயம் ஆகியவற்றுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாகாண ரீதியிலான பரதநாட்டிய போட்டிகள் கடந்த 26ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

இலஞ்சம் பெற்ற ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவர் கைது

மாகாண கல்வித் திணைக்களம்

அதில் திறந்த வயதுப் பிரிவில் தரம் 9 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்கள் பங்குபற்ற முடியும் என்று மாகாண கல்வித் திணைக்களம் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது.

மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்ற பாடசாலை : மாகாண கல்வி திணைக்களம் அசமந்தம்! | The School Won The Competition Due To Fraud Jaffna

இருப்பினும் உடுத்துறை மகா வித்தியாலயமானது தரம் 08இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் குறித்த போட்டியில் இணைத்திருந்த நிலையில் அந்த பாடசாலை முதலாவது இடத்தையும், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் இரண்டாவது இடத்தையும் பெற்றது.

உடுத்துறை மகா வித்தியாலயம் மோசடி செய்து முதலாவது இடத்தை பெற்றதன் காரணமாக, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயமே முதலாமிடம் என அறிவிக்கப்பட்டு, உடுத்துறை மகா வித்தியாலயமானது போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பக்கச் சார்பு காரணமாக இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

வடக்கு மாகாண ஆளுநர்

இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கடந்த 28ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலும் அவர்கள் அதில் அக்கறை செலுத்தவில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர் தெரிவித்தனர்.

இது குறித்து மாகாண கல்வி திணைக்களத்தினை தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையை ஏற்றுக்கொண்டதுடன், உடுத்துறை மகா வித்தியாலயம் மீது விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறினர்.

மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்ற பாடசாலை : மாகாண கல்வி திணைக்களம் அசமந்தம்! | The School Won The Competition Due To Fraud Jaffna

அத்துடன் மேலதிக விபரங்களுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லீ அவர்களை அல்லது மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியற்துறை உதவிப் பணிப்பாளர் ராஜன் ஆகியோரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் பிரட்லீ அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தவேளை அவரது கைப்பேசி உறக்க நிலையிலும், ராஜன் அவர்கள் கைப்பேசிக்கு பதில் வழங்காத நிலையிலும் காணப்பட்டது.

மாகாண கல்வி திணைக்களத்திடம் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் பெற்ற நிலையில், உதவிப் பணிப்பாளர் ராஜன் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய அதிபரை மிரட்டியதாகவும், உடுத்துறை மகா வித்தியாலயம் தான் போட்டியில் பங்குபற்ற முடியும் என தெரிவித்ததாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

2005 இல் மகிந்த ஜனாதிபதியானதற்கு யார் காரணம்...வெளியான தகவல்

2005 இல் மகிந்த ஜனாதிபதியானதற்கு யார் காரணம்...வெளியான தகவல்

உடுத்துறை மகாவித்தியாலயம்

அத்துடன் போட்டி நடைபெற்ற அன்றையதினம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவர்கள் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை திடீரென மின்சாரம் தடைப்பட்டதாகவும், போட்டியில் ஈடுபட்டு முடிந்த பின்னரே மின்சாரம் கிடைத்ததாகவும், ஆகையால் தங்களது போட்டியை மீண்டும் நடாத்துமாறு மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவர்கள் கேட்டவேளை ராஜன் குறித்த மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடிந்து கொண்ட பின்னர் வற்புறுத்தலின் மத்தியிலேயே கடிதத்தை பெற்றுவிட்டு மீண்டும் போட்டியில் ஈடுபட அனுமதித்ததாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்ற பாடசாலை : மாகாண கல்வி திணைக்களம் அசமந்தம்! | The School Won The Competition Due To Fraud Jaffna

உடுத்துறை மகாவித்தியாலயம் மீது ராஜன் தனிப்பட்ட செல்வாக்கினை காண்பிப்பதற்கான காரணம் என்ன என தெரியவில்லை என்றும், தமக்கு நீதி கிடைக்காவிட்டால், தமது பிள்ளைகள் தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்ற அனுமதி கிடைக்காவிட்டால் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் போராட்டம் செய்யவுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

தேசிய மட்ட போட்டிகள் நாளையதினம் திருகோணமலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

32 ஆயிரம் சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

32 ஆயிரம் சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024