இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்கு நகர காரணம்! வெளியாகும் தகவல்கள்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டாவது ஈரானிய கப்பல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தகவல்களின்படி, IRIS Bushehr என்று அழைக்கப்படும் இந்த கப்பல், ஒரு டேங்கர் வகை இராணுவ விநியோக கப்பலாக கருதப்படுகிறது.
இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கணிசமான ஈரானிய அதிகாரிகள்
நேற்று மூழ்கியதாகக் கூறப்படும் IRIS Dena கப்பலுக்கு பொருட்களை வழங்குவதற்காக இந்த IRIS Bushehr கப்பல் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் கணிசமான எண்ணிக்கையிலான கேடட் அதிகாரிகள் இருப்பதாகவும், தற்போது AIS (தானியங்கி அடையாள அமைப்பு) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தக் கப்பல் இதற்கு முன்பு பல முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் எனினும், தற்போதைய இந்த வருகை எந்த முன்கூட்டிய திட்டமிடலும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |