நாமலின் விளக்கமறியல் பின்னணியில் உள்ள ஒரே ஆதாரம்! மொட்டு தரப்பு வெளிப்படை

CID - Sri Lanka Police Namal Rajapaksa
By Dharu Sep 18, 2026 01:40 PM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் குறித்த விமான நிறுவனத்துக்கும் இடையில் எந்தவொரு மின்னஞ்சல் பரிமாற்றமும் இடம்பெறவில்லை என அவரது தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மின்னஞ்சலிலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என அவர்  தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கத்தின் சில தரப்பினர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களைத் திரிபுபடுத்தி சமூகமயப்படுத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டினார்.

அனோஜன் சிவராசா குறித்து வெளிவிவகார அமைச்சின் சிறப்பு அறிக்கை

அனோஜன் சிவராசா குறித்து வெளிவிவகார அமைச்சின் சிறப்பு அறிக்கை

மின்னஞ்சல் பரிமாற்றங்கள்

கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள மின்னஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த விமான நிறுவனத்தின் சில உள்நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், அதில் நாமலின் தலையீடு அல்லது அவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் எவ்விதக் குறிப்பும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாமலின் விளக்கமறியல் பின்னணியில் உள்ள ஒரே ஆதாரம்! மொட்டு தரப்பு வெளிப்படை | The Sole Evidence Behind Namals Remand

அத்துடன், ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே சாட்சியம் நிமல் பெரேரா என்பவர் அரசாங்கத்திடம் வழங்கியுள்ள வாக்குமூலம் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், சாட்சியச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு குற்றத்தின் உடந்தையாளரின் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை குற்றவாளியாக்க முடியாது என்பது சட்டத்தை அறிந்த எவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம் எனவும் கூறியுள்ளார்.

நாமலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்காக பொதுச் சொத்துச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவரை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய சட்டத்தரணி மனோஜ் கமகே, நாமல் சிறையில் அடைக்கப்பட்டாலும் பொதுஜன பெரமுனவையோ அல்லது மக்கள் எழுச்சியையோ எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தார்.

நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை

நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்