வற் வரி திருத்தம் மீதான சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
வற் வரி எனப்படும் பெறுமதிசேர் வரி திருத்தம் மீதான சட்டமூலத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramarathne) கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
அதன்படி, சபாநாயகர் இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறுமதிசேர் வரி திருத்தம் மீதான சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு கடந்த 09ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்
இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி இந்தச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 4ஆம் இலக்க பெறுமதிசேர் வரி திருத்தம் சட்டமாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
