போதைப்பொருளுடன் சிக்கிய பௌத்த பிக்கு!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Kanooshiya
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பௌத்த தேரர் ஒருவர் மற்றும் இரண்டு நபர்கள் மெல்சிறிபுர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருணாகலை- கரந்தகொல்ல பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் நேற்று (11.10.2025) இந்த கைது இடம்பெற்றுள்ளது.
27 வயதுடைய தேரரிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொகை
கைது செய்யப்பட்ட தேரருடன் வெலகெதர பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய ஒருவர் மற்றும் இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேகநபர்களிடமிருந்தும் 4800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட தேரர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அதி சொகுசு கார் ஒன்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி