முட்டை விலை குறைப்பு சாத்தியேமே இல்லை! வெடித்தது சர்ச்சை
முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்கலாம் என்று ஒரு குழு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கங்கள் ஹெட்டிபொல காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, 18 ரூபாய்க்கு ஒரு முட்டையை விற்க முடியாது என்று அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஒரு முட்டையின் விலை 30 ரூபாய்க்கு அருகில் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
எவ்வாறாயினும், டிசம்பர் வரை தட்டுப்பாடு இல்லாமல் முட்டைகளை விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. அலஹகூன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பரவும் வதந்திகளால் முட்டை உற்பத்தியாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டால், அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு 'நியாயமான விலையை' வழங்குவதற்காக அதற்கு பொறுப்பான சங்கங்கள் மற்றும் தரப்பினருடன் இணைந்து நாளை நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வர்த்தக மற்றும் உற்பத்தி சங்கங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
