வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்...! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு மாவட்ட மட்ட சுற்றுலாத் திட்டங்களை விரைவுபடுத்த, நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரியா, கலேவெல, திருகோணமலை ஆகிய பகுதிகளின் அபிவிருத்தித் திட்டங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயற்படுத்தப் பணிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் நடைமுறை
கொள்முதல் நடைமுறைத் தாமதங்களைத் தவிர்க்க, ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நிதியமைச்சின் புதிய திட்டத்தைப் பின்பற்றக் கூறப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவைப்படும் 8 இலட்சம் மனித வளத் தேவையைப் பூர்த்தி செய்ய ஹோட்டல் பாடசாலைப் பயிற்சிகளை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |