திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை

Sri Lankan Tamils Trincomalee
By Vanan Sep 17, 2023 02:45 PM GMT
Report

தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி வாகனத்தின் மீது சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய கொடுந்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் சோழன் மு. களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள  கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “தியாக தீபன் திலீபனின் ஊர்தி பவனி வாகனத்தின் மீது சிங்கள இனவெறிக் கும்பல் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தது.

இனவெறிக்கும்பலின்  கொடுந்தாக்குதல்

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

பன்னாட்டு அளவில் ஐ.நா. முன்பு பெரும் கவனயீர்ப்பு மாநாடு நடந்தேறுகிற இந்த நேரத்தில், இது போன்ற கொடுந்தாக்குதல்களை இலங்கை சிங்கள இனவெறிக்கும்பல் நடத்துவது கவனம் கொள்ளத்தக்கது.


இன்னும் தாயகத்தின் நிலை என்னவென்பதை தெரியப்படுத்தும் நிலை இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் சிங்களர்களின் இனவெறியைக் கண்டித்து 12 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த திலீபனின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக இந்த ஊர்தி பவனி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதல் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் சிங்களர்களின் இனவெறி அடங்கவில்லை என்பதே!

இந்நிலையில் திருகோணமலை கப்பல்துறை பகுதியில் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை இன்று ஊர்திப் பவனி வந்துள்ளது, அங்கு இலங்கையின் தேசியக் கொடியுடன் வந்த சிங்களக் காடையர்கள் ஊர்திப் பவனி மீது தாக்குதல் மேற்கொண்டு, தியாக தீபத்தின் உருவ படத்தினையும் அதில் கலந்து கொண்ட தமிழர்களையும் தாக்கியுள்ளனர்.

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இராணுவம், காவல்துறை முன்னிலையில்

இந்தத் தாக்குதல் சிங்கள இராணுவம், காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. அதன் காணொளி காட்சியை கண்ட போது நெஞ்சம் பதைக்கிறது.

திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை | Thileepan Vehicle Attack Trinco

சர்தாபுர பகுதியில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்துள்ளனர். அந்தப் பகுதியில் காவல்துறையினர், இராணுவம், புலனாய்வுத்துறையினர் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

யாரும் இத்தாக்குதலைத் தடுக்கவில்லை. முகத்தை கருப்புத்துணியால் கட்டிய சிங்கள இளைஞரொருவன் பெரிய கல்லினால் வாகனத்தை தாக்கும் காட்சி நம்மை நடுங்க வைக்கிறது.

தொடர்ந்து வாகனம் முன்னேறிய நிலையில், வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி காத்திருந்த, ஆண்களும், பெண்களும் நிறைந்திருந்த கூட்டம், வாகனத்தை சுற்றிவளைத்து, தடிகளால் அடித்து தாக்குவது வேதனைக்குரியது.

சிங்கள மக்களுக்குள் இருக்கும் இனவெறி என்றுமே மாறாது என்பதை இந்நிகழ்வு மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்து, ஊர்தியை திருப்பி அருகிலுள்ள தம்பலகாமம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில், அங்கேயே தங்கியுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்கள் உயிர்பிழைத்ததே பெருஞ்செயல்.

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனிமீது காடையர் குழு தாக்குதல்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனிமீது காடையர் குழு தாக்குதல்

பேரினவாத அரசு பின்புலத்தில்  

இலங்கை பெளத்த சிங்கள பேரினவாத அரசு பின்புலத்தில் இருந்து கொண்டு இந்த கொடுந்தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை | Thileepan Vehicle Attack Trinco

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன அங்கே எப்படி இருக்கும் என்பதை சர்வதேச சமூகம் இதன் வழியாகவாவது புரிந்து கொள்ளட்டும்.

சிங்கள மக்களோடு, தமிழ்மக்கள் எந்த காலத்திலும் இணைந்து வாழவே முடியாது என்பதே இந்த கொடுஞ்செயல்கள் நமக்கு காட்டும் படிப்பினை!

இந்தத் தாக்குதல்களை ஐ.நா. கவனயீர்ப்பு மாநாட்டுக் குழுவினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Scotland, United Kingdom

15 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025