திருக்கோணேஸ்வரா ஆலய காணி விவகாரம் : தொடுக்கப்பட்டது வழக்கு
திருகோணமலை,திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் 01 ரூட். 29 பேச்சஸ், காணி துண்டும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர் 02 ரூட் 01 பேர்ச்சஸ் காணித்துண்டும் , மற்றும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்சஸ் உள்ளடங்கிய காணிதுண்டும் திருகோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமானவை என வெளிப்படுத்தவும்
அவற்றுக்கான பாரதீனப்படுத்தல் கட்டளையை vesting Order ஐ திருக்கோணேஸ்வஸ்ர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரியும் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலைமையிலான திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினரால் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் , தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக கடந்த 29 ம் திகதி சித்திரை மாதம் 2026 அன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
பல்வேறுபட்ட அரச கெடுபிடிகளை கட்டுப்படுத்தகோரி வழக்கு
1950 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள் மற்றும் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பவற்றை கட்டுப்படுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |