மாபெரும் துரோகத்தை செய்யாதீர் : தமிழ் அரசியல்வாதிகளிடம் ஆறு.திருமுருகன் வேண்டுகை
இந்தப்போராட்டம் வேறு வடிவம் எடுத்திருந்தலும் விடிவின் பாதை என்னவென்று தெரியவில்லை.11 வருடங்கள் சிறையில் துன்பப்பட்டு கடைசிவரை கஷ்ரப்பட்டு தமது உயிரை துச்சமாக மதித்து போராடி வெறும்கையுடன்தான் இந்த மண்ணை விட்டு போயுள்ளார்கள்.எனவே எல்லோரும் அவர்களுக்கு செய்யும் அர்ப்பணம் ஒன்றுபட்டு உழைப்பதும் ஒரு நிம்மதியான வாழ்வை இந்த ஈழத்தமிழர்களுக்கு சேர்த்து கொடுப்பதும்தான்.
ஒருகாலத்தில் ஒரு கவிஞன் எழுதினான் கடலுக்கு கூட எல்லை வைத்த கடவுளே ஈழத்தமிழர்களின் கண்ணீருக்கு எல்லை வைக்கமாட்டாயா என்று.ஈழத்தமிழர்களின் கண்ணீர் இன்னமும் நிறுத்தப்படவில்லை. அது இன்னமும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது.
கணவனை இழந்தவர்களாக, பெற்ற பிள்ளைகளை இழந்தவர்களாக, உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாதவர்களாக,பொட்டை வைக்கலாமா அல்லது அழிக்கலாமா, எங்கோயோ இருந்து எனது கணவர் வருவார் என ஏங்கி அழுது கொண்டிருக்கும் தாய்மாரும், வீடுகளில் படங்களை நிரப்பி வைத்து சகோதரர்களை நினைவு கூருகின்றவர்களும், விளக்கு ஏற்றி அழுகின்றவர்களும் என ஈழத்தமிழர்களின் துயரம் தொடர்கதையாகத்தான் உள்ளது.
இவ்வளவு அழிவிற்கு பின்னரும் நாம் ஒன்றுபடாவிட்டால் இந்த மண்ணுக்கும் உயிரிழந்வர்களுக்கும் செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.
இவ்வாறு தெரிவித்தார் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(31) இடம்பெற்ற மாவை சேனாதிராசாவின் ஒருவருட நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்