மன்னாரில் மாடு திருடியவர்களை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்
மன்னார் (Mannar) - நானாட்டான் பிரதேசத்தில் இரண்டு மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
நேற்று (25) மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ”நானாட்டான் பிரதேசத்தின் உமநகரி வீதியில் நேற்று முன்தினம் (24) இரவு மாடுகளை கொண்டு செல்வதற்காக முச்சக்கரவண்டியில் சுற்றித்திரிந்த மூவர் அப்பகுதி இளைஞர்கள் சிலரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர்.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
கிராமத்து இளைஞர்கள் அவர்களை துரத்திச் சென்று மன்னார் தள்ளாடி பெரிய பாலத்தடியில் பிடித்து மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர்கள் மன்னார் நகரப் பகுதியில் சாவற்கட்டு, மற்றும் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் திருடப்பட்ட மாடுகள் கட்டைக்காடு மற்றும் மற்றும் உமநகரி கிராமங்களை சேர்ந்த உரிமையாளர்களுடையது என தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இரு மாடுகளும் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் முருங்கன் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முருங்கன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை நானாட்டான் பிரதேசத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையிலும் பாரிய சிரமப்பட்டு வளர்க்கும் கால்நடைகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்