இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சாவை இந்திய காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையில் இருந்து இந்த போதைபொருளை கடத்த முற்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (31.07.2026) இடம்பெற்றுள்ளது.
இரகசிய தகவல்
குறித்த சம்பவத்தில் காவல்துறையினர் ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புதுமடம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையின் போது, 146 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 292 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதன் மதிப்பு சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது இது இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |