மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது!
மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டைனமைட் வெடிபொருளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த கடற்றெதழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக பரிசோதனை
இதன்போது 500 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், ஒரு வெளி இணைப்பு இயந்திரம், ஒரு படகு மற்றும் கடற்றொழிலில் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், அவை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



