யாழில் சோகம்: பரிதாபமாக பலியான மூன்று மாத குழந்தை
யாழில் மூன்று மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (04) இடம்பெற்றுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சஜீவன் காஜத்திரி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பெண் குழந்தை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை (21.07.2025) அன்று பிறந்துள்ளது.

குறித்த குழந்தை நேற்று முன்தினம் (04) பால் குடித்தவேளை விக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பிள்ளையை உறங்க வைத்த நிலையில் குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.
மரண விசாரணை
இந்தநிலையில், குழந்தை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையின் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |