வீடு புகுந்த குழுவின் அட்டகாசம் : மூவர் வெட்டிக்கொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
நீண்டகால பகை இன்று பெரும் கொலையில் முடிந்துள்ளது.இதன்படி வீடு புகுந்த குழுவொன்று மூவரை வெட்டி சாய்த்துள்ளது.அம்பலாந்தோட்டை(Ambalantota), மாமடல பகுதியில் இன்று (2)இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
6 பேர் கொண்ட குழுவொன்று வீடொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக நிலவி வந்த பகை
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த பகையின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 23 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி