தங்க நகை களவு: திருமலையில் சிக்கிய மூவர்!
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Gold
By Dilakshan
திருகோணமலை உப்புவெளி பகுதியில் தங்க நகைகளை களவாடிய மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி குறித்த களவு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்கள் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்போது, உப்புவெளி காவல்துறையினரால் 22, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நகைகள் மற்றும் பணம் மீட்பு
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட ரூ. 165,000 பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பதில் பொறுப்பதிகாரி சம்பத் தலைமையில் ஜேம்ஸ், பார்க்க, செனவிரத்ன, சிந்திக்க, குமாரசேகர, நிஸான், யுவகாந்த் மற்றும் காவிந்தி ஆகிய காவல்துறை அலுவலர்கள் மேற்குறித்த விசாரணைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி