தமிழர்கள் பிரிந்து தனியாகச் செல்லவேண்டிய காலம் உருவாகிவிட்டது - சிவமோகன்

Mullaitivu Ilankai Tamil Arasu Kachchi SL Protest Sri Lanka Fuel Crisis
By Vanan Jul 08, 2022 10:35 AM GMT
Report

இந்த நாடு முன்னேறுவதற்குரிய எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இப்படிப்பட்ட சிங்கள அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து வாழக்கூடிய நிலை இல்லை.

தமிழர்களை பொறுத்தமட்டில் பிரிந்து தனியாகச் செல்லவேண்டிய காலம் இயற்கையாகவே உருவாகி விட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக தமக்கு எந்தவிதமான எரிபொருட்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியினர் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

இன்று புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து மாட்டு வண்டியில் நோயாளர் ஒருவரை ஏற்றியவாறு அவருக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் சிகிச்சை அளித்தவாறும், நோயாள் காவு வண்டி ஒன்றினை கயிற்றில் கட்டி கட்சி ஆதரவாளர்கள் அதனை இழுத்தவாறும் துவிச்சக்கர வண்டிகளுடனும் ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி புதுக்குடியிருப்பு நகர்பகுதி ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்றது.

மாட்டு வண்டியில் நோயாளர் ஒருவரை ஏற்றியவாறு சிகிச்சை

தமிழர்கள் பிரிந்து தனியாகச் செல்லவேண்டிய காலம் உருவாகிவிட்டது - சிவமோகன் | Time Come For Tamil Peoples Separate Go Alone Lk

தற்போது நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்கள் வரையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு முச்சக்கரவண்டிகளுக்கோ, அல்லது மோட்டார் சைக்கிள்களுக்கோ எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், உடனடியாக எரிபொருள் பிரச்சினைக்கு தீர்பவு பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தை சந்தித்து தங்களின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூடியதோடு, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இங்கு கருத்து தெரிவித்த போதே சிவமோகன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்கள் கூட உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி உயிரிழப்புக்கள் நிகழ்ந்தாலும் அதற்கு பதில் சொல்வதற்கு கூட எவரும் இல்லை.

தற்போது உள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்காவு வண்டிகள் உரிய சேவையினை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒரே தெரிவு மாட்டு வண்டி தான்

தமிழர்கள் பிரிந்து தனியாகச் செல்லவேண்டிய காலம் உருவாகிவிட்டது - சிவமோகன் | Time Come For Tamil Peoples Separate Go Alone Lk

இவ்வறான நிலையில் அவர்கள் வீடுகளில் வந்து ஆபத்தான நோயாளர்களை ஏற்றுகிறார்கள். இல்லை எனில் மக்களுக்கு உள்ள அடுத்த தெரிவு முச்சக்கர வண்டி. முச்சக்கர வண்டிகளும் தற்போது எரிபொருள் இல்லாத நிலையில் அல்லது மோட்டார் சைக்கிளில் செல்வதாக இருந்தால் அதற்கும் பெற்றோல் இல்லை. இவ்வாறான நிலையில் ஒரே தெரிவு மாட்டு வண்டி தான்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக எரிபொருள் கிடைக்கவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகத்தினரும் அரசியல் தலைவர்களும் தான் காரணம்.

ஆகவே இந்தப் பிரச்சினையினை வெளியில் கொண்டு வர வேண்டிய தேவை எமக்கு உள்ளது. நாங்களும் வெளிக் கொண்டு வரவில்லை எனில் நாங்களும் அவர்களுக்கு துணை போனதாகவே இருக்கும். எங்களை பொறுத்தளவில் இந்த முட்டாள்தனமான அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை. அதனால் தான் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம் கோரி போராட்டத்திற்கு சென்றதே.

இவர்களுடன் ஒருகாலமும் எங்களுடைய பயணம் முடியப்போவதில்லை என்பது தான். இப்போது அதனை உறுதிப்படுத்திவிட்டார்கள்.

வடகிழக்கு மாகாணத்தினை தனியாக தமிழர்களிடம் ஒப்படைக்கப்படுமாக இருந்தால்

தமிழர்கள் பிரிந்து தனியாகச் செல்லவேண்டிய காலம் உருவாகிவிட்டது - சிவமோகன் | Time Come For Tamil Peoples Separate Go Alone Lk

எங்களை பொறுத்தமட்டில் வடகிழக்கு மாகாணத்தினை தனியாக தமிழர்களிடம் ஒப்படைக்கப்படுமாக இருந்தால் எரிபொருள் அல்ல சகலதும் கொண்டுவரக்கூடிய அபிவிருத்தியினை முன்னெடுக்கக்கூடிய நிலைப்பாடு எங்களிடம் உள்ளது.

ஆனால் எங்களிடம் 300 இற்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்துள்ளது. தடைப்பட்டியலில் 400 பெயரின் பெயர்கள் போடப்பட்டுள்ளது. இவ்வளவும் வளமானவை. இன்று டொலரினை கேட்டு கெஞ்சுகின்றார்கள்.

இன்று சொல்கின்றார்கள். டொலர் இருந்தாலும் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்திடம் பணம் இல்லை என்று. சர்வதேச நாணய நிதியம் வருகின்றது. கதைக்கின்றது கதைக்கின்றது என்றார்கள். அவர்கள் இதுவரை ஓம் என்று சொல்லவில்லை. இதனை சொல்லிச் சொல்லி மக்களுக்கு தவணை சொல்லி வருகின்றது அரசு.

மக்களை பொறுத்தமட்டில் தற்போது விவசாயம் கடற்தொழில் உள்ளிட்ட நாளாந்த தொழில் நடவடிக்கைக்கு எரிபொருளினை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கான தீர்வினை உரியவர்கள் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026