கூட்டமைப்பின் இராஜதந்திரம் செல்லாக் காசானதா..!

Sri Lankan Tamils TNA Rajavarothiam Sampanthan Sonnalum Kuttram
By Kirupa Nov 12, 2023 06:42 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், அடுத்த தீபாவளிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறி, இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.

எனினும் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் இன்றுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இராஜதந்திர முயற்சிகளின் தோல்வி

சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்

சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளின் தோல்வியே தமிழ் மக்கள் இன்று செல்லா காசாகியுள்ளமைக்கு காரணம் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

கூட்டமைப்பின் இராஜதந்திரம் செல்லாக் காசானதா..! | Tna Diplomacy After War

அதற்கு சாட்சியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட தீபாவளி தின வாழ்த்துச் செய்தி அமைந்துள்ள அதேவேளை, அந்த அறிக்கையிலுள்ள விடயங்கள், தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நன்மதிப்பை குறைக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

90 வயதை கடந்துள்ள இரா.சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான தீபாவளி தினச் செய்தியில், இனப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைந்து தீர்வை வழங்காத பட்சத்தில் சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்குவோம் எனக் கூறியுள்ளார்.

அரசியல் தீர்வு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சியாளர்களின் மனநிலையால் கேவலமடைந்த இலங்கை : சொர்க்கபுரியாக மாற்றும் திறன் தமிழர்களிடமாம்

ஆட்சியாளர்களின் மனநிலையால் கேவலமடைந்த இலங்கை : சொர்க்கபுரியாக மாற்றும் திறன் தமிழர்களிடமாம்

அரசியல் தீர்வு 

அடுத்த வருடத்திற்குள் தீர்வை வழங்குவதாக ரணில் விக்ரசிங்க கடந்த வருடம் கூறியிருந்த போதிலும் தீர்வு விடயத்தில் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் இராஜதந்திரம் செல்லாக் காசானதா..! | Tna Diplomacy After War

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ள இரா.சம்பந்தன், தற்போதும் அவர்கள் பேரினவாத அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான கருமங்களை முன்னெடுக்கப்பட தாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதையும் கூறிவைக்க விரும்புவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதனூடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

அம்பிட்டியவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது : எச்.எம்.எம். ஹரீஸ் ஆதங்கம்

அம்பிட்டியவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது : எச்.எம்.எம். ஹரீஸ் ஆதங்கம்

சம்பந்தனின் அறிக்கை

இந்த நிலையில் இரா.சம்பந்தனின் இன்றைய தீபாவளி தின அறிக்கையானது தமிழ் தேசியப் பரப்பில் உள்ளவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கூட்டமைப்பின் இராஜதந்திரம் செல்லாக் காசானதா..! | Tna Diplomacy After War

இரா.சம்பந்தனின் இன்றைய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஏளனமாக விமர்சித்துள்ளார்.

” தீபாவளித் தீர்வைக் காணவில்லை என்றீர்கள்.இதோ வந்து விட்டது. தீர்வு கிடைக்காதுவிடின் சர்வதேசத்தின் உதவியுடன் களம் காணப்போகிறாராம்“ என செல்வராசா கஜேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் இரா.சம்பந்தன் இன்றைய தீபத் திருநாளில் வெளியிட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற அவருக்கு உறுதுணையாக யார் இருப்பார்கள் என்ற கேள்வியும் காணப்படுகின்றது.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த அனைத்து பங்காளிக் கட்சிகளும் அதில் இருந்து விலகியுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் தனித்துவிடப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் பிரிந்து சென்றுவிட்டார்கள் என்றாலும் கூட இலங்கை தமிழரசு கட்சிக்குள் ஒன்றுமை உள்ளதா என்ற விடயமும் சந்தி சிரிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாக கூறியுள்ளமை குறித்து தனது மன வேதனையை மாவை சேனாதிராஜாவிடம் இரா.சம்பந்தன் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதி என நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கூறிய இரா.சம்பந்தனை பின்பற்றி நாடாளுமன்றம் சென்ற சுமந்திரனும் விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தன்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாரில்லாத ஒருவராகவே வலம் வருகின்றார்.

மூளைசாலியால் பயன் இல்லை : அதிபரை கடுமையாக சாடும் சஜித்

மூளைசாலியால் பயன் இல்லை : அதிபரை கடுமையாக சாடும் சஜித்

தலைமைத்துவ போட்டி

அத்துடன் இரா.சம்பந்தனின் வயோதிபத்தை பயன்படுத்தி, இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றும் முயற்சியாகவே எம்.ஏ.சுமந்திரன், அவரை பதவி விலக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கூட்டமைப்பின் இராஜதந்திரம் செல்லாக் காசானதா..! | Tna Diplomacy After War

இதன் அடிப்படையில் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு இடையிலான பிணைப்பும் முறிந்துள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சியிலுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் எதிர்ப்பாளர்களாகவும் ரணில் ஆதரவாளர்களாகவும் எந்தப் பக்கம் செல்வதென்று தெரியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.

மொழியாலும் தொழில் நிபுணத்துவத்தாலும் கட்சியிலும் நாடாளுமன்றத்திலும் ஆதிக்கம் செலுத்தும் எம்.ஏ.சுமந்திரன், உயர்மட்டத்தினருக்கு நெருக்கமானவராக இருக்கின்றாரே தவிர மக்களுக்கு நெருக்கமான அரசியல்வாதியாக இல்லை என்ற விமர்சனங்களும் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்கும் நிலையில், இரா.சம்பந்தன் கூறுவதை போன்று சர்வதேசத்தின் ஆதரவுடன் அரசியல் தீர்வை பெறுவோம் என கூறும் கருத்து சிறு பிள்ளைக்குரிய சிரிப்பு வரவைக்கும் வகையிலேயே இருப்பதாக துறைசார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025