டக்ளஸை அழைத்த சுமந்திரன்: தமிழ் அரசியலில் அதிர்ச்சி திருப்பம்
அண்மைய சில நாட்களாக தமிழர் அரசியல் களத்தில் தமிழரசுக்கட்சி தொடர்பிலும் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) தொடர்பிலும் தான் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பையடுத்து, வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்தநிலையில், தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள கட்சி எப்படி தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களுடன் இணைய முடியும் என பாரிய சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு இன்னுமொரு அதிர்வலைக்குரிய விடயமாக டக்ளஸ் தேவானந்தாவை சுமந்திரன் அழைத்துள்ளதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலும், இந்த தொடர் சந்திப்புக்களின் பிண்ணனி, தமிழ் அரசியல் களம், அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்ளூராட்சி ஆட்சியமைப்பு குறித்த பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
