மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள புகையிலைப் பாவனை!
இலங்கையில் சுமார் 50 ஆயிரம் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அபாயகர ஔடதங்கள் சபையின் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஏனைய போதைப்பொருட்களுடன் ஒப்பிடும் போது, அதன் பரவல் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புகையிலைப் பாவனை

இதேவேளை பாடசாலை அமைப்பில் புகையிலை பாவனையின் போக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
''பாடசாலை அமைப்பில் நாம் அடிக்கடி புகையிலை பாவனையை பார்க்கிறோம், வீட்டிலேயே புகையிலையைச் செய்து சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் பழக்கம் மாணவர்கள் இடையே காணப்படுகின்றது.
புகையிலையால் ஏற்படும் போதைக்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளனர்'' என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.