இலங்கையில் இன்று தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கையில் கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதியின் வீழ்ச்சியினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் சடுதியான சரிவை எதிர்நோக்கியிருந்தது.
எனினும் இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு நகையகங்களின் தங்க விற்பனை நிலவரங்கள் படி, தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கையில் 22 கரட் தங்க பவுன் ஒன்று 146000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
22 கரட் தங்க பவுன்

எனினும் இன்றைய 22 கரட் தங்க பவுன் ஒன்று தினம் 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 162,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நேற்று இரவு முதல் நீக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.