இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : இரா.சம்பந்தனுக்கு அனுதாபப் பிரேரணை
இன்றைய (06.06.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை மறைந்த முன்னான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜவரோதயம் சம்பந்தன், கோசல நுவன் ஜயவீர, ஜே. ஆர். பி. சூரியப்பெரும, மாவை. சோ. சேனாதிராசா, டொனால்ட் திசாநாயக்க ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளது.
5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
