பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் அரச சார்பற்ற அமைப்புக்கள் : சரத் வீரசேகர குற்றச்சாட்டு..!

Parliament of Sri Lanka Sarath Weerasekara Sri Lanka Economy of Sri Lanka Buddhism
By Eunice Ruth Jan 23, 2024 12:29 PM GMT
Report

இலங்கையில் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரச சார்பற்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவிகளுக்கு அடிமையாகியுள்ள தரப்பினர் குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் தற்போது பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.பௌத்த கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிகழ்நிலை காப்பு சட்டம்: சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் சுமந்திரன்..!

நிகழ்நிலை காப்பு சட்டம்: சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் சுமந்திரன்..!

பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல் 

வேறு நாடுகளில் இவ்வாறாக நடைபெற்றால், அதே நேரத்தில் குறித்த தவறுக்கான தண்டனையை அந்த நாட்டு மக்களே பெற்றுக் கொடுப்பார்கள். பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டிருந்தார்.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் அரச சார்பற்ற அமைப்புக்கள் : சரத் வீரசேகர குற்றச்சாட்டு..! | Today Parliment Sarath Weerasekara Tamil Sinhala

அத்துடன், பௌத்த மதத்தையும் தலதா மாளிகையையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சேபால அமரசிங்க கைது செய்யப்பட்டார். எனினும், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் டொலர்களுக்காக சொந்த நாட்டையும் பௌத்தையும் ஒருவரால் அவமதிக்க முடியுமானால், அவரது மனைவி, தாய் மற்றும் சகோதரி ஆகியோரையும் குறித்த நபருக்கு பணத்துக்காக காட்டிக் கொடுக்க முடியும்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் தரப்பினர் தண்டிக்கப்பட வேண்டுத். இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் மூலம் எம்மால் தவிர்க்க முடியும். இதற்காக குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு: நாடாளுமன்றத்தில் இராதாகிருஸ்ணன் கோரிக்கை

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு: நாடாளுமன்றத்தில் இராதாகிருஸ்ணன் கோரிக்கை

நிகழ்நிலை காப்பு சட்டம்

இலங்கையில் நடைபெறும் விடயங்கள் குறித்து மக்களை தெரியப்படுத்த பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவை இருந்தாலும், சமூக ஊடகங்கள் இதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் அரச சார்பற்ற அமைப்புக்கள் : சரத் வீரசேகர குற்றச்சாட்டு..! | Today Parliment Sarath Weerasekara Tamil Sinhala

இதன்படி, 32 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் போலி தகவல்கள் குறித்து ஆராய சட்டமூலமொன்று அவசியம்.

இதற்கேற்க, உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் போலியாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து அவதானத்துடன் செயல்பட முடியும்.

இந்த சட்டமூலத்தை வேறு விதமாக வெளிக்காட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில்? கூகுள், யூடியுப், முகநூல் உள்ளிட்ட சமூக வலையத்தள நிறுவனங்களுடன் சிறிலங்கா பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

சரத் வீரசேகர 

குறித்த நிறுவனங்களால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தால், அவை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் அரச சார்பற்ற அமைப்புக்கள் : சரத் வீரசேகர குற்றச்சாட்டு..! | Today Parliment Sarath Weerasekara Tamil Sinhala

அத்துடன், குறித்த பரிந்துரைக்கேற்ப சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், விமர்சனங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டது.

விமர்சனங்கள் நல்லது. எனினும், சிறந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளலாம். எனினும், ஒருவரை அவமதிக்கும் வகையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. விமர்சனம் எனும் பெயரில் யாரும் யாரையும் அவமதிக்க முடியாது.” என தெரிவித்தார்.


You may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025