வவுனியாவில் சூறாவளி - மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம் - அதிகாரிகளின் அசண்டையீனம்
வவுனியா (Vavuniya) - பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியாவில் இன்று (17.05.2025) காலை ஏழு மணியளவில் கடும் சூறாவளிக்காற்று வீசியதுடன் மழையும் பொழிந்தது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மின்தடையும் ஏற்ப்பட்டுள்ளது.
மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது
குறிப்பாக வவுனியா நகரப்பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூந்தோட்டம் சந்தியில் வீதிக்கரையில் நின்ற தென்னைமரம் முறிந்து மின்சார வயரின் மீது வீழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பொதுமக்களால் தகவல்
இது தொடர்பாக மின்சாரசபைக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் மரம் முறிந்து நான்கு மணி நேரம் கடக்கின்ற நிலையிலும் அது இன்னமும் அகற்றப்படவில்லை.
குறித்த மரம் பாதையின் நடுவில் ஆபத்தான முறையில் காணப்படுகின்றது. பொதுமக்கள் அதனூடாகவே பயணம் செய்து வருகின்ற நிலையினை காணமுடிகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
