இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல்
இன்று(05) நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
சூரிய உச்சம்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சூரியனின் தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே செல்லப் போகிறது.
இன்று பம்பலப்பிட்டி, மாலிபொட, கெப்பெட்டிபொல, படல்கும்புர மற்றும் பொத்துவில் ஆகிய நகரங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்.