காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
WEATHER
WEATHER REPORT
By Kanna
மத்திய, தென், மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மேற்கு, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் இடங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.