பிளேஆஃப் தகுதி சுற்றில் அதிரடி காட்டிய குஜராத் டைட்டன்ஸ்! பெங்குளூருவுடன் இறுதிப்போட்டி
முல்லன்பூரில் நடைபெற்ற 2026 ஐ.பி எல் தொடரின் பிளேஆஃப் தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அணியின் தலைவர் ஷுப்மன் கில் அதிரடியாக, ஐந்தாவது ஐ.பி.எல் சதத்தை பூர்த்தி செய்த நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் கில் 47 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இது பிளேஆஃப் தொடரில் ஒரு துடுப்பாட்ட வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் ஆகும்.
வரலாற்றில் பதிவான வைபவ்
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்று்கொண்டது.
ராஜஸ்தான் அணி சார்பில் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 47 பந்துகளில் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இந்த ஓட்டங்களுடன் ஐபிஎல் போட்டிகளில் 1,000 ஓட்டங்களை அதிவேகமாக எட்டிய முதல் வீரராக வரலாற்றில் பதிவானார்.
இந்த போட்டியில் கில் பெற்றுக்கொண்ட சதத்தின் மூலம், 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 129 ரன்கள் எடுத்தபோது 49 பந்துகளில் அவர் நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்தார்.
குஜராத் vs பெங்குளூரு
விருத்திமான் சாஹா (2014) மற்றும் ரஜத் பதிதார் (2022) ஆகியோரும் பிளேஆஃப் சுற்றில் 49 பந்துகளில் சதம் அடித்திருந்தனர்.

கில், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம், பிளேஆஃப் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதன்படி எதிர்வரும் 31.05.2026 அன்று இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்குளூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |