ஏப்ரல் மாதம் 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!
நடப்பு ஏப்ரல் மாதத்தில் இலங்கை(sri lanka) ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன்படி ஏப்ரல் 2025 இன் முதல் 15 நாட்களில் 93,915 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதன்படி இந்தியா(india) 18,220 (19.4%) முதலிடத்திலும், இங்கிலாந்து (england)11,425 (12.2%) இரண்டாமிடத்திலும் ரஷ்ய கூட்டமைப்பு(russia) 8,705 (9.3%) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இலங்கை இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 816,191 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 38% அதிகரிப்பு ஆகும்.
ஜேர்மனியிலிருந்து 7,746, அவுஸ்திரேலியாவிலிருந்து 6,604, பிரான்சிலிருந்து 4,658, சீனாவிலிருந்து 3,492, பங்களாதேஷிலிருந்து 3,251, அமெரிக்காவிலிருந்து 2,150, சுவிட்சர்லாந்திலிருந்து 1,823 மற்றும் பிற நாடுகளிலிருந்து 25,841 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
