சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி!
சிகிரியா–பிதுரங்கல பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஹங்கேரியைச் சேர்ந்த 67 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறை தகவலின்படி, அவர் தனது மனைவியுடன் பிதுரங்கல சுற்றுலா பயணத்தை முடித்து ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, காட்டுயானைகள் அடிக்கடி வருகை தரும் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் காட்டுயானைகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
காட்டுயானை அபாயம்
இந்த நிலையில், சம்பவத்தின் போது அப்பகுதி மக்கள் யானையை விரட்டியடித்து, காயமடைந்தவரை சிகிரியா கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவர் காயங்களால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பிதுரங்கல பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் காட்டுயானை அபாயத்தை எதிர்கொள்கிறார்கள் என பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சம்பவதினமன்று கூட, அபாயத்தை பொருட்படுத்தாமல் பல சுற்றுலாப் பயணிகள் அந்த வீதியில் நடந்து சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |