இந்தியாவுடனான கனிம வள ஒப்பந்தம்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்
இந்தியாவினால் எந்தவொரு முன்மொழிவும், கனிம வள ஆய்வு ஒப்பந்தம் குறித்து எமது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17.02.2026) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும். எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அவ்வாறு எந்தவொரு ஒப்பந்த முன்மொழிவும் முன்வைக்கப்படவுமில்லை.
அது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுமில்லை. இதுபோன்று பல்வேறு பழைய ஒப்பந்த முன்மொழிவுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் எமது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
குறிப்பாக பால் உற்பத்தி தொடர்பில் இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஆனால் எமது அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. நாம் தேசிய கனிம வள கொள்கையொன்றை வகுத்திருக்கின்றோம்.
அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்துள்ளது. நாம் அதனை பின்பற்றி அதற்கமையவே கனிம வளங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்போம்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |