இரவு நேரம் இடம்பெற்ற கோரவிபத்து : ஒருவர் பலி சிறுமி உட்பட மூவர் படுகாயம்
Colombo
Accident
Death
By Sumithiran
ரம்புக்கன, தலகொல்ல பகுதியில் நேற்று (23) இரவு பாரிய மரம் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் காயமடைந்தனர்.
மாவனெல்ல-ரம்புக்கன சாலையில் இரவு ஒன்பது இருபது மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மாவனெல்ல அடிப்படை மருத்துவமனை
இரண்டரை வயது சிறுமி உட்பட நான்கு பயணிகள் முச்சக்கரவண்டியில் சிக்கிக்கொண்டனர். உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மாவனெல்ல அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முச்சக்கர வண்டியின் 37 வயது ஓட்டுநர் படுகாயமடைந்தார். லோல்லேகொடவைச் சேர்ந்த மற்ற மூன்று பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரம் விழுந்ததால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி மற்றும் ஒரு வியாபார நிலையம் சேதமடைந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி