யாழில் முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இந்திய றோட்டறி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (22) இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், தெல்லிப்பளை பலாலி வீதியில் உள்ள மயிலிட்டி தெற்கு கட்டுவன் பகுதியில் வீதி ஓரத்திலேயே குறித்த நிழல் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
றோட்டறி கழகம்
தனவந்திரி செயற்திட்டத்தின் தலைவர் றோட்டேரியன் தனசேகர் தலைமையில், சுன்னாகம் பாரிய றோட்டறி கழகம், இந்திய றோட்டறி கழக அங்கத்துவர்கள், க்றீன் லேயர் அமைப்பு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு, யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர், சுன்னாகம் பாரம்பரிய றோட்டறி கழகம் மற்றும் யாழ்பப்பாண கழகங்களின் ஊடாக தெரிவு செயயப்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றித்திறனாளிகளுக்கும் உதவி திட்டங்கள் வழங்கப்பவுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் மட்டுமல்லாது கிளிநொச்சி (Kilinochchi), முல்லைத்தீவு (Mullativu) மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களுக்கும் உதவி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

