நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி - ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு ஐ.பி.சி தமிழின் இதயம் கனிந்த நினைவேந்தல்

Sri Lankan Tamils Sri Lanka
By Independent Writer Feb 12, 2026 11:38 AM GMT
Report

தமிழர் மனங்களில் என்றும் அழியாத நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்திக்கும், ஈகைப்பேரொளி முருகதாசனும்,ஐ.பி.சி தமிழ் ஊடக கலையகத்தில் கனிந்த உணர்வுகளுடன் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

ஐ.பி.சி தமிழ் ஊடக கலையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஐ.பி.சி தமிழின் நிர்வாகத்தினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு தங்கள் மரியாதையையும் நினைவுகளையும் செலுத்தினர்.

நிகழ்வின் தொடக்கத்தில் இருவரின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து, இரங்கல்மிகு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி

நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி

சத்தியமூர்த்தி – ஊடக நேர்மையின்

“ஊடகம் என்பது ஒரு அடையாளம்” என்று சொல்லப்படும். உண்மையை உள்ளபடி சொல்லும் தைரியம், நேர்மையின் பக்கம் நின்று சமூகத்துக்கு வழிகாட்டும் பொறுப்பு. அவை அனைத்தும் ஜனநாயகத்தின் கண்களாக திகழ்கின்றன.

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி - ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு ஐ.பி.சி தமிழின் இதயம் கனிந்த நினைவேந்தல் | Tribute To Sathyamoorthy Murugadoss

அந்த உயரிய பணியை தமது உயிரை பணயம் வைத்து செய்தவர்களில் முக்கியமானவர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி.

மட்டக்களப்பை பூர்வீகமாகக் கொண்ட அவர், தாயகத்தின் ஊடக உலகில் தனித்துவமான குரலாக விளங்கினார்.

தமிழினம் எதிர்கொண்ட நசுக்கல்களையும், மக்களின் வலிநிறைந்த வாழ்வையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி அவர்.

ஒரு செய்தியாளராக மட்டுமல்ல, ஒரு உணர்வுள்ள தமிழனாக அவர் தனது கடமையை ஆற்றினார்.

செய்திப்பார்வைகள், அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளூர் சமூக விவாதங்கள் என பல்வேறு தளங்களில் அவர் வெளிப்படுத்திய பகுப்பாய்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றத்திலிருந்து அதன் இறுதிக்காலம் வரை அவர் இணைந்திருந்த பணி, எதிர்கால ஊடகவியலாளர்களுக்கான ஒளிக்கோபுரமாக அமைந்தது.

தான் நம்பிய உண்மையை வெளிப்படுத்துவதில் ஒருபோதும் பின்னடையாத சத்தியமூர்த்தி, யுத்தம் உச்சத்தை எட்டிய அச்சநேரத்திலும் ஒதுங்காமல் பணியாற்றினார்.

எறிகணை தாக்குதலில் உயிர்நீத்த அவர், ஊடகப் பொறுப்பின் சின்னமாகவே நினைவில் நிற்கிறார்.

அவரது மறைவுக்குப் பின் “நாட்டுப்பற்றாளர்” என்ற கௌரவ நாமம் வழங்கப்பட்டது என்பது அவரது அர்ப்பணிப்புக்கான சமூகத்தின் மரியாதையாகும்.

அவர் விட்டுச் சென்ற வெற்றிடம், அது ஒரு மனிதரின் இழப்பு மட்டுமல்ல; தமிழ் ஊடக உலகின் இதயத் துடிப்பில் உருவான பேரிழப்பாகும்.

மருந்துத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

மருந்துத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

ஈகைப்பேரொளி முருகதாசன்

 தீயில் எழுந்த நியாயக் குரல் 2009 – தமிழர் வரலாற்றின் இருண்ட அத்தியாயம். அந்த வேதனையின் நடுவில், “சர்வதேசமே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று உலக மனசாட்சியை உலுக்கிய குரலாக எழுந்தார் முருகதாசன்.

ஜெனீவா மனித உரிமை முன்றலில், 2009 பிப்ரவரி 12 ஆம் திகதி, தன்னுடைய 7 பக்க மரண சாசனத்தை எழுதி வைத்து, தமிழினத்தின் வேதனையை உலகுக்கு அறிவிக்கும் கடைசி முயற்சியாக தன்னையே தீயிற்கு ஆகுதியாக்கினார்.

அது ஒரு உயிரின் முடிவு மட்டுமல்ல, உலக நியாயத்தைக் கேட்க எழுந்த தீக்குரல். ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச நீதியை வலியுறுத்தி தன்னை ஈகமாக்கிய முருகதாசன், “ஈழதாசன்” என தமிழர் இதயங்களில் நிலைத்திருக்கும் ஒரு சின்னமாக மாறினார்.

தன் உடலை எரியும் நெருப்பின் பசித்த நாவிற்கு அர்ப்பணித்த அந்த தியாகம், இன்றளவும் மனங்களை நடுங்கச் செய்கிறது.

இவ்வாறான போற்றக்கூடிய மிகு மாந்தர்களை இன்றைய நாளில், ஐ.பி.சி தமிழ் கனிந்த இதயங்களுடன் நினைவு கூர்கிறது.

வடக்கின் சுற்றுலாத்துறையில் ஒரு புதிய சகாப்தம்

வடக்கின் சுற்றுலாத்துறையில் ஒரு புதிய சகாப்தம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021