திருகோணமலை மாணவர்கள் உயிரிழப்பின் எதிரொலி- நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்! (காணொளி)
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது வீட்டில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கெமராக்கள் உடைக்கப்பட்ட நிலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என குற்றம் சுமத்தியே மக்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தை அடுத்து கிண்ணியா நகரமே பெரும் களேபர பூமியாக மாறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கி மாணவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் பல பக்களிலும் போராட்டாங்களை முன்னெடுத்து வருகின்றனர்.