திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு
புதிய இணைப்பு
திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 பேரும் இன்று (09) காலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.
வழக்கு விசாரணை
இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |