படகு கவிழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழப்பு!
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் செந்தூர் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீன் பிடிப்பதற்காக செந்தூர் மதுரங்குடா கலப்பு பகுதிக்கு இரு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்ததில் குறித்த இளைஞர் உயிரிழந்ததுடன் மற்றவர் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய சுதேந்திரன் ஜனூஷன் என்ற இளைஞர் ஆவார்.
பிரேத பரிசோதனைக்காக
குறித்த இளைஞனின் சடலம் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசம் வரை ஊடுருவி சென்ற தியாக தீபம் திலீபன் பேரணி : ஆளுநர் விடுத்த பணிப்புரை

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி