விஷமிகளின் நாசகாரச் செயல் - மூவர் கைது
trinco
police
fire
fisher man
navatcholai
By Kalaimathy
திருகோணமலை கும்புறுப்பிட்டி நாவற்சோலை கடற்கரையில் மீன் பிடிப்படகுகள் இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளன.
இச் சம்பவம் நேற்று நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன் போது நான்கு படகுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
மீனவர்களுக்கு இடையிலான பகையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி