முல்லைத்தீவில் 67இற்கு மேற்பட்ட விகாரைகள் - ஈழத்தமிழ் மக்களால் இனி என்ன செய்ய முடியும்...

Mullaitivu Trincomalee Sonnalum Kuttram Buddhism
By Vanan Jul 31, 2023 12:48 PM GMT
Report

நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் மலிந்துபோன ஒரு தேசமாக தமிழர் தாயகப்பகுதி மாறிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தமிழர்களின் இருப்பு என்பது அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

கடந்த காலங்களில் கிழக்கில் அம்பாறையில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புகள் அங்கு தமிழர்களின் இருப்பினை விழுங்கி ஏப்பம்விட்ட நிலையில், இன்று ஒரு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கூட பெற முடியாத அளவிற்கு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதுபோல, ஈழத்தமிழர்களால் தமிழர் தேசத்தின் தலைநகரம் என்று விழிக்கப்படும் திருகோணமலை மிகப்பாரதூரமான ஆக்கிரமிப்புகளால் ஒட்டுமொத்த தமிழினத்தின் உரிமைகோரல்களும் தகர்க்கப்பட்டு முழுமையான சிங்கள முஸ்லிம் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துபோயிருக்கின்றது.

இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மக்கள் தங்களது இருப்பையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்க, அங்கிருக்கும் ஏனைய இனங்களைச் சார்ந்த இரட்டை இலக்க நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு தமிழர்களின் வரலாற்று தலைநகரில் தமிழர்களின் தொன்மையின் அடையாளங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

இவ்வாறான நிலையில் இப்போது தமிழீழத்தின் இதயபூமி என்று விழிக்கப்படுகின்ற மணலாறு பிரதேசம் கூட, முற்றுமுழுதாக வெலிஓயாவாக மாற்றப்பட்டதும் அங்கிருக்கிருக்கூடிய தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் அபகரிப்பட்ட அபாயகரமான சூழல் இப்போது முழுமையாக முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக வியாபித்திருக்கின்றது.

இவை நீராவியடி, குருந்தூர் மலை, அண்மையில் கொக்குத்தொடுவாயில் அகழப்பட்ட மனிதப்புதைகுழிகள் என நீண்டுகொண்டிருக்கும் நிலையில் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தற்போதைய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 67 விகாரைகள் பதிவுசெய்யப்பட்டுருப்பதாக கூறினார்.

அப்பிரதேசங்களில் தமிழர்களின் நிலம் மட்டுமல்லாது கடலும் மலையும் கூட அபகரிப்படுகின்ற நிலையில் ஈழத்தமிழ் மக்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.   

அதுமட்டுமல்லாது அங்கு இடம்பெறும் இன்னும் பாரதூரமான நடவடிக்கைகள் தொடர்பாக  பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் இதன்போது கூறினார்.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025