சிறிலங்கா கடற்படை முகாமில் நிகழ்ந்த அனர்த்தம் -மாணவர் உட்பட 18 பேர் வைத்தியசாலையில்
Trincomalee
Sri Lanka Navy
By Jaso
திருகோணமலையில் சிறிலங்கா கடற்படை முகாமில் இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி மாணவர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்.
முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் உட்பட பெரியவர்கள் குழுவுமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடிந்து வீழ்ந்த இறங்குதுறையின் ஒரு பகுதி

முகாமிலுள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இவர்கள் காயடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.