ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி
கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று உத்தியோகபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
31 வயதான இந்த நபர் மீது ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்தது மட்டுமல்லாமல், இரண்டு விதமான துப்பாக்கிச் சட்ட விதிமீறல்கள் உட்பட மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்ற விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், சந்தேக நபர் திங்களன்று தனது முதல் நீதிமன்ற முன்னிலையையும் மேற்கொண்டுள்ளார்.
ஆயுள் தண்டனை
இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து என்பது மிகவும் உயர்மட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெறும் ஒரு நிகழ்வாகும், அத்தகைய இடத்தில் ஜனாதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், தாக்குதலுக்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து பாதுகாப்புப் பிரிவினர் விரிவான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |