ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்
2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
பாரிய அநீதி
2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற கொழும்பு , கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓய்வுதியர்களே ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த வருட (2025) வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை.
அத்துடன் 2025 ஜனவரி முதலாம் ஆம் திகதியின் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரிய அளவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, 2020 - 2024 காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை நீக்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |