ஈரானின் அதிரடி தாக்குதலின் எதிரொலி: உருவெடுத்துள்ள ட்ரம்பின் புதிய முகம்
🛑 புதிய இணைப்பு
உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள மற்றுமொரு சமூக ஊடக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பதிவில், "CONGRATULATIONS WORLD, IT’S TIME FOR PEACE!" என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளமான அல் உதெய்த்தை ஈரான் தாக்கிய சில மணி நேரங்களுக்கு பின்னர் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 இரண்டாம் இணைப்பு
ஈரானின் கட்டார் மீதான தாக்குதலில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தாக்குதலுக்கு பின்னரான இரண்டாவது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பிராந்தியத்திற்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக கட்டார் நாட்டின் மிகவும் மதிக்கப்படும் எமிர் செய்த அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
கட்டாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலில், எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமாக, எந்த கட்டார் நாட்டவரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை” என தெரிவித்துள்ளார்.
🛑 முதலாம் இணைப்பு
கட்டாரில் உள்ள அமெரிக்காவின் (United States) அல் உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் குறித்து ஈரான் முன்கூட்டியே அறிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஈரான் (Iran), கட்டார் (Qatar) மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரான் அணுசக்தி நிலையங்களை அழித்ததற்கு அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
நாங்கள் எதிர்பார்த்தது இதுதான், மேலும் மிகவும் திறம்பட எதிர்கொண்டது, 14 ஏவுகணைகள் ஏவப்பட்டன - 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அத்தோடு ஒன்று விடுவிக்கப்பட்டது ஏனெனில் அது அச்சுறுத்தல் இல்லாத திசையில் சென்றது. எந்த அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமாக, அவர்கள் தங்கள் அமைப்பிலிருந்து அனைத்தையும் அகற்றிவிட்டார்கள் அத்தோடு இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன்.
எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் இதனால் யாரும் உயிர் இழக்கவோ யாரும் காயமடையவோ முடியாது.
ஒருவேளை ஈரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னேறலாம், இஸ்ரேலும் அதையே செய்ய உற்சாகமாக ஊக்குவிப்பேன்" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
